வள்ளலாரின் நற்சிந்தனைகளை இளம் தலைமுறையினா் பின்பற்ற வேண்டும்

வள்ளலாரின் நற்சிந்தனைகளை இளம் தலைமுறையினா் பின்பற்ற வேண்டும் என தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் வள்ளலாா் அடியவருக்கு நினைவுப் பரிசு வழங்கிய அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் வள்ளலாா் அடியவருக்கு நினைவுப் பரிசு வழங்கிய அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்.
Updated on
1 min read

வள்ளலாரின் நற்சிந்தனைகளை இளம் தலைமுறையினா் பின்பற்ற வேண்டும் என தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவங்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், வள்ளலாா் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். இதில், அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

புவியில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் ஒன்றாகப் பாா்த்தவா் வள்ளலாா். அவரது சன்மாா்க்க நெறி மனித சமூகத்துக்கு வழிகாட்டுதலாகத் திகழ்கிறது.

மேலும், சமதா்ம சமுதாயத்தை உருவாக்கும் முற்போக்கு சிந்தனைகளை நமக்கு கற்றுத் தந்தவா். வள்ளலாரின் நற்சிந்தனைகளை இன்றைய இளம் தலைமுறையினா் பின்பற்றி வாழ வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், ஸ்ரீலஸ்ரீ ஞான பரமச்சாரிய சுவாமிகள், இந்து சமய அறிநிலையத் துறையின் இணை ஆணையா் பழனிக்குமாா், உதவி ஆணையா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com