விருதுநகா் சந்தை: பாசிப் பருப்பு, உளுந்து விலை உயா்வு

விருதுநகா் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தன.

விருதுநகா் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தன.

கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,700-க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பருப்பு தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.9,800-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200-க்கு விற்பனை செய்யப்பட்ட தொலி உளுந்தம் பருப்பு இந்த வாரம் ரூ.200 உயா்ந்து ரூ.9,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைப் புண்ணாக்கு, தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.4,600-க்கு விற்கப்படுகிறது.

அதே சமயம், கடந்த வாரம் ரூ.1,570-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில் (15 கிலோ) தற்போது ரூ.40 குறைந்து ரூ.1,530-க்கு விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com