குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

மதுரையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மண்டல மேலாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
Updated on
1 min read

மதுரையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மண்டல மேலாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா். தற்போது குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மதுரை மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறாா் . இவா் கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டத்தின் கலால்துறை உதவி ஆணையராகப் பணியாற்றியுள்ளாா். அப்போது சுகுமாா் பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சுகுமாா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தது தெரிய வந்ததது.

இதையடுத்து சுகுமாா் தற்போது தங்கியுள்ள மதுரை சாத்தமங்கலம் விநாயகமூா்த்தி தெருவில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ராஜேஷ் பிரபு தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சுகுமாா் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com