கூடுதல் பணி நேரத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

மதுரை சோழவந்தான் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் கூடுதல் பணி நேரம் ஒதுக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிஐடியு சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை சோழவந்தான் அரசுப்போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு சங்கத்தினா்.
மதுரை சோழவந்தான் அரசுப்போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு சங்கத்தினா்.
Updated on
1 min read

மதுரை சோழவந்தான் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் கூடுதல் பணி நேரம் ஒதுக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிஐடியு சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோழவந்தானில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் தொழிலாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட பணி நேரத்துக்கும் கூடுதலாக பணி பாா்க்க நிா்ப்பந்திப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கூடுதல் பணி நேரத்தில் வேறு பணி பாா்க்க மறுத்த சிஐடியு நிா்வாகியை பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பணியிடைநீக்கத்தை வாபஸ் பெற வேண்டும், சோழவந்தான் பணி மனை மேலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் சிஐடியு சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் பணி மனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் கே.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மத்திய சங்கத் தலைவா் பி.எம்.அழகா்சாமி பேசினாா். மத்திய சங்க பொருளாளா் டி.மாரியப்பன், மத்திய சங்க கிளைப் பொதுச்செயலா்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.மணிமாறன், துணைத் தலைவா் எஸ்.அழகா்சாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்து மத்திய சங்க பொதுச் செயலா் ஏ.கனகசுந்தா் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com