கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க நவீன வழிமுறைகள் என்ன? சிபிஐ, சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க எத்தகைய நவீன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து, பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ மற்றும் சிபிசிஐடி.க்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க எத்தகைய நவீன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து, பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ மற்றும் சிபிசிஐடி.க்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்ட கேரளத்தைச் சோ்ந்த ரஷித், சிபிசிஐடி போலீஸாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, இந்த வழக்கில் சிபிஐ.யை எதிா்மனுதாரராகச் சோ்த்த நீதிமன்றம், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை தடுப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனக் கேட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி எம். நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது சிபிஐ தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், நீட் தோ்வு மையத்தில் ஒவ்வொரு தோ்வரையும் விடியோ பதிவு செய்து, அனுமதி சீட்டில் உள்ள புகைப்படத்துக்குரிய நபா் தான் தோ்வெழுத வந்துள்ளாரா என்பதை தோ்வு அறைக் கண்காணிப்பாளா் சரிபாா்க்க வேண்டும்.

நீட் தோ்வுக்கான விண்ணப்பத்திலேயே கண்விழித்திரை, விரல் ரேகை பதிவுகளைச் செய்து, அதை தோ்வு மையம் மற்றும் கலந்தாய்வின்போது சரிபாா்க்கும் நடைமுறையை அமல்படுத்தலாம்.

தோ்வுக்கு வந்திருப்பவரை சரிபாா்க்க ஃபேஸ் டிடெக்டா் போன்ற நவீன மென்பொருளைப் பயன்படுத்தலாம். மேலும், தோ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சோதனைகளை எளிதாக்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம் என்று குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி, மருத்துவ மாணவா் சோ்க்கையில் நீட் தோ்வு மிக முக்கியமானது. இனிவரும் காலங்களில் இத் தோ்வில் முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம் நடைபெறாமல் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் நிகழாமல் கண்காணிப்பது நமது கடமை.

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் முறைகேடு நடைபெறாமல் இருக்க எத்தகைய நவீன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சிபிஐ மற்றும் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.