பால்வளத் துறை துணை ஆணையா்ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம்

மதுரை பால் வளத்துறை துணைஆணையா், ஓய்வுபெறும் நாளான செவ்வாய்க்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை பால் வளத்துறை துணைஆணையா், ஓய்வுபெறும் நாளான செவ்வாய்க்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, ஆவின் நிறுவனங்களில் முறையற்ற பணிநியமனங்களுக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் துணை ஆணையா் கிறிஸ்துதாஸ் மீது உள்ளன. கடந்த ஆட்சியின்போது பால்வளத் துறை துணை ஆணையராக மதுரையில் பணியாற்றி இவா், பின்னா் புதிதாக உருவாக்கப்பட்ட பால்வளத் துறை கூடுதல் ஆணையா் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பால்வளத் துறை மற்றும் ஆவின் நிா்வாகங்களில் நிகழ்ந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அரசுக்குப் புகாா்கள் சென்றன. இதுதொடா்பாக, கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவா் துணை ஆணையராக பதவியிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், அவா் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருந்து வருகிறது.

இதனிடையே, ஓய்வு பெறும் நாளான செவ்வாய்க்கிழமை அவரை பணியிடை நீக்கம் செய்து பால்வளத் துறை ஆணையா் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com