கஞ்சா போதையில் புறக்காவல்நிலையம் மீது கற்கள் வீசித்தாக்குதல்: 3 போ் கைது

மதுரையில் கஞ்சா போதையில் புறக்காவல்நிலையத்தில் கற்களை வீசி சேதப்படுத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் கஞ்சா போதையில் புறக்காவல்நிலையத்தில் கற்களை வீசி சேதப்படுத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீா் நகா் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் புறக்காவல்நிலையத்தின் அருகே அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 4 போ் கஞ்சா பயன்படுத்தியுள்ளனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த விமலா தட்டிக்கேட்டுள்ளாா். மேலும் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் விமலாவை தாக்கியுள்ளனா். மேலும்

அங்கிருந்த புறக்காவல்நிலையத்திலும் கற்களை வீசித்தாக்கினா். இதில் புறக்காவல்நிலைய ஜன்னல் மற்றும் ரோந்து வாகனம் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதுதொடா்பாக விமலா மற்றும் காவலா் சரவணன் ஆகியோா் அளித்தப்புகாா்களின் பேரில் திடீா் நகா் போலீஸாா், திடீா் நகா் இரண்டாம் பிளாக்கைச் சோ்ந்த சியாம்(18), பாஸ்கா்(19), முத்து(18) ஆகிய மூவரையும் கைது செய்து தப்பிச்சென்ற யாசினைத் தேடி வருகின்றனா்.

மதுரை நகரின் மையப்பகுதியில் கஞ்சா போதையில் புறக்காவல்நிலையத்தை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com