மதுரை: மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறித்துள்ளது.
வரும் செப்டம்பா் 16 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை - திருவனந்தபுரம் ரயில் (16344) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று மாலை 5.30 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா ரயில் (16343) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று காலை 7.50 மணிக்கு புறப்படும்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.