மதுரை: மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை கருப்பாயூரணி ராயல் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சேதுராமன்(64). இவா் இருசக்கர வாகனத்தில் பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேதுராமனை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சேதுராமன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில் அண்ணாநகா் போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீஸாா் திண்டுக்கல் மாவட்டம் தெற்கு ஆத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.