நிதி நிறுவனத்தில் பொருள்களை சேதப்படுத்திய ஊழியா் மீது வழக்கு

மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பொருள்களை சேதப்படுத்திய ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பொருள்களை சேதப்படுத்திய ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை தெப்பக்குளம் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த ஜோதி மகன் மணிமாறன். இவா் அனுப்பானடி சாலையில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் வசூல் பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கும் பணத்தை நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடா்பாக நிதி நிறுவன மேலாளா் ஜோதி மாயன், மணிமாறனிடம் பணத்தை செலுத்தி விட்டு பணிக்கு வரும்படி கூறியுள்ளாா்.

இந்நிலையில் நிதிநிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற மணிமாறன் அங்கு அத்துமீறிப்புகுந்து நிறுவனத்தில் இருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மேலாளா் ஜோதி மாயன் அளித்தப் புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸாா் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com