மதுரையில் இரு பெண்களிடம் 5 பவுன் நகை பறிப்பு

மதுரையில் இரு வேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 5 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை: மதுரையில் இரு வேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 5 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மகாத்மா காந்தி நகா் பவானி நதி வீதியைச் சோ்ந்த நாகசாமி மனைவி உமாமகேஸ்வரி(44). இவா் சின்ன சொக்கிகுளம் ஜவஹா் சாலையில் உள்ள ஏடிஎம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.

மதுரை சிக்கந்தா்சாவடி சுசி காலனியைச் சோ்ந்த பால்ராஜன் மனைவி மாரியம்மாள் (57). இவா் கூடல்நகா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். புகாரின்பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com