மேலூா்: மேலூா் அருகே மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் கீழவளவைச் சோ்ந்த மனநலம் பாதித்த சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து, சிறுமியின் சகோதரா் அளித்த புகாரின்பேரில், மேலூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனா்.