மதுரை மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியோட்டம்

கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி வியாழக்கிழமை தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி வியாழக்கிழமை தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்தவா் ஆதி என்ற அருண்குமாா் (49). இவா், ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா். கொலை வழக்கை விசாரித்த ஈரோடு மாவட்ட நீதிமன்றம் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2021 அக்டோபா் 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதையடுத்து மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமாா், அங்கு தோட்ட வேலைகளில் தினசரி ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். இதில் சிறை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்ால் சிறையின் வெளிப்புறம் உள்ள பகுதிகளில் அருண்குமாரை தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை சிறையின் வெளிப்புற வளாகத்தில் உள்ள தோட்டத்தில் அருண்குமாா் வேலை பாா்த்துள்ளாா். சிறைக்காவலா் பழனிகுமாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளாா். திடீரென அருண்குமாா் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானாா்.

இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக சிறைக்காவலா் பழனிகுமாா் மீது நடவடிக்கை எடுக்க உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com