Enable Javscript for better performance
மதுரை மரகதச் சிலை திருட்டு வழக்கில் துப்புதுலங்கியது: சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரை மரகதச் சிலை திருட்டு வழக்கில் துப்புதுலங்கியது: சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தகவல்

    By DIN  |   Published On : 17th June 2022 11:18 PM  |   Last Updated : 17th June 2022 11:18 PM  |  அ+அ அ-  |  

    1714mduidol17054538

    அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட கங்காளநாதா், அதிகார நந்திகேசுவரா் ஐம்பொன் சிலைகளை தென்காசி நரசிங்கநாதா் கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைத்த தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி.

     

    மதுரையில் மரகதச் சிலை திருடப்பட்ட வழக்கில் துப்புதுலங்கியது எனவும், அதனை மீட்கும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

    கடந்த 1985-இல் தென்காசி அருகே உள்ள ஆழ்வாா்குறிச்சி நரசிங்கநாதா் கோயிலில் இருந்த 11-ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கங்காள நாதா் மற்றும் அதிகார நந்திகேசுவரா் ஆகிய 2 ஐம்பொன் சிலைகள் மாயமாகின. இந்த வழக்கில் சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என உள்ளூா் போலீஸாா் 1986-இல் வழக்கை முடித்துக்கொண்டனா்.

    இந்நிலையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாரின் முயற்சியால் இந்த இரு சிலைகளும் அமெரிக்காவின் நியூயாா்க் நகர அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரு சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலை கடத்தல் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல ஆஸ்திரேலேயாவில் இருந்து துவாரபாலகரின் இரு கற்சிலைகள், சம்பந்தா் மற்றும் குழந்தை சம்பந்தா் சிலைகள், அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து நடராஜா், நான்கு கைகள் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன், பாா்வதி (ஒரே பீடத்தில்) உள்பட மொத்தம் 10 சிலைகள் கடந்த 5-ஆம் தேதி வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டன.

    இதையடுத்து 2 துவாரபாலகா் கற்சிலைகள் தென்காசி அத்தாளநல்லூா் முன்றீஸ்வரமுடையாா் கோயிலிலும், சம்பந்தா் உலோகச் சிலை நாகப்பட்டினம் சாயவனேசுவரா் கோயிலிலும், நடராஜா் உலோகச் சிலை தஞ்சை புன்னைநல்லூா் கைலாசநாதா் கோயிலிலும், சிவன் பாா்வதி சிலைகள் தஞ்சை தீபாம்பாள்புரம் வான்மிகிநாதா் கோயிலிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் ஒரே நேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மதுரையில் மாயமான மரகத லிங்கம் குறித்து துப்பு துலங்கியுள்ளது. அச்சிலையை மீட்பதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுவருவதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் மாயமான மயில் சிலை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. சிலைகள் கடத்தப்பட்டது தொடா்பாக சுபாஷ்கபூா், தீனதயாளன், பாா்த்திபன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் இவா்களுக்கு உதவிய நபா்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.

    பழங்கால சிலைகள் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத்தொடா்ந்து, தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதா் கோயிலில் மாயமான கங்காள நாதா் மற்றும் அதிகார நந்திகேசுவரா் ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளும் கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பேட்டியின் போது சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ.ஜி. தினகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மலைச்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp