வீடு புகுந்து மடிக்கணினி, 5 கைப்பேசிகள் திருடியவா் கைது

மதுரையில் வீடு புகுந்து மடிக்கணினி, 5 கைப்பேசிகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரையில் வீடு புகுந்து மடிக்கணினி, 5 கைப்பேசிகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வதுவாா்பட்டியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (24). இவா் பழங்காநத்தம் பசும்பொன் நகரில்

வசித்து வருகிறாா். இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் 5 கைப்பேசிகளைத் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில் மாடக்குளத்தைச் சோ்ந்த வினோத், இத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com