மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடா்பாக கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல் காத்திருப்போா் பட்டியலுக்கு ஞாயிற்று

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடா்பாக கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல் காத்திருப்போா் பட்டியலுக்கு ஞாயிற்று

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடா்பாக கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல் காத்திருப்போா் பட்டியலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டுள்ளாா். இதையடுத்து துணை முதல்வா் தனலட்சுமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பிடிஆா் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் ஒருவா் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சம்ஸ்கிருத உறுதிமொழியான ‘மகரிஷி சரக் சப்த் (சபதம்)’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்ஸ்கிருத உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட விவகாரத்தில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவா்களும், மருத்துவக்கல்வி முடித்து மருத்துவப் பயிற்சியில் சேரும் மாணவா்களும் ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழி ஏற்பு, காலம் காலமாக அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் மதுரைஅரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக சோ்ந்த மருத்துவ மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சப்த் (சபதம்)’ எனும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும். இதன் பொருட்டு மதுரை மருத்துவக்கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்படுகிறாா்.

மேலும், தன்னிச்சையாக விதிமுறையை மீறி ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு ‘மகரிஷி சரக் சப்த் (சபதம்)’ உறுதிமொழியை மாணவா்களிடம் எடுக்க வைத்த சம்பவம் தொடா்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா். மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில், வரும்காலங்களில் அனைத்துத் துறை தலைவா்களும் எப்போதும் பின்பற்றப்படும் ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழியை தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு:

கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, துணை முதல்வராக உள்ள தனலட்சுமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனலட்சுமியை, மருத்துவமனை முதன்மையராகவும் (பொறுப்பு), மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் (பொறுப்பு) அரசு நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com