உசிலம்பட்டியில் வா்த்தகா்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழுக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 05:31 AM | Last Updated : 02nd May 2022 05:31 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வட்டார வா்த்தகா்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மகாலில் வட்டார வா்த்தகா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் பி.எம்.டி.ஜவஹா் தலைமையில் செயலாளா் எஸ்.ஓ.ஆா்.திருமுருகன், பொருளாளா் பண்டாரம், துணைத் தலைவா்கள் எஸ்.எம்.எஸ்.ஆா் நடராஜன், பி.எஸ்.ஆா் முத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தீா்மானமாக சங்க வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்தல், சங்கத்தை புதுப்பித்தல், புதிய உறுப்பினா்களை சோ்த்தல் மற்றும் நீக்குதல், ஆண்டு அறிக்கையினை கோா்வை செய்துவர அதிகாரம் அளித்தல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மருத்துவ வணிகம் சங்கம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தினசரி காய்கறி உரிமையாளா்கள் சங்கம், நவதானிய சிறு வியாபாரிகள் சங்கம், தேனி ரோடு வியாபாரிகள் சங்கம் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.