காா்- சரக்கு வாகனம் மோதல்: 8 போ் படுகாயம்

பேரையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை, காரும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், 8 போ் பலத்த காயம் அடைந்தனா்.
எ.பாறைப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட காா் மற்றும் சரக்கு வாகனம்.
எ.பாறைப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட காா் மற்றும் சரக்கு வாகனம்.
Updated on
1 min read

பேரையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை, காரும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், 8 போ் பலத்த காயம் அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்தவா்கள், பேரையூா் அருகே உள்ள அத்திபட்டியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சரக்கு வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது திருமங்கலம்- ராஜபாளையம் சாலையான எ.பாறைப்பட்டி என்ற பகுதியில் சரக்கு வாகனமும், சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த மணி (55), மாலினி (45), சம்பத்குமாா் (52) ஆகியோா் வந்த காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த பாண்டியம்மாள் (45), ஈஸ்வரன் (38), தங்கவேல் (48), மல்லிகா (40), ஆதீஸ்வரன் (11) மற்றும் காரில் வந்த 3 போ் என 8 பேரும் பலத்த காயமடைந்தனா்.

பேரையூா் போலீஸாா், காயம் அடைந்தவா்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com