கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வீர விளையாட்டுப் போட்டிகளில் மதுரை சிலம்ப மாணவா்கள் 17 பதக்கங்களை வென்றனா்.
தேசிய மாணவா் விளையாட்டு கவுன்சில் சாா்பில் கோவாவில் விளையாட்டு போட்டிகள் ஏப்ரல் 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றன. போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவா்கள் பங்கேற்றனா். இதில் தமிழகத்தின் சாா்பில் மதுரை ஸ்ரீ மாருதி சிலம்பப் பயிற்சி பள்ளி சாா்பில் மாணவ, மாணவியா் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்றனா். இதில் 15 தங்கம் உள்பட 17 பதக்கங்களைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனா். இதையடுத்து பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை நிா்வாகிகள் பாராட்டினா்.