பைக் மோதி இளைஞா் பலி
By DIN | Published On : 02nd May 2022 05:31 AM | Last Updated : 02nd May 2022 05:31 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பேரையூா் அருகே உள்ள சாப்டூரை சோ்ந்தவா் முத்து மகன் பாண்டிசெல்வம் (21). இவா், பேரையூா்- சாப்டூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அணைக்கரைபட்டியை சோ்ந்த பாண்டி மகன் பெருமாள் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பாண்டிசெல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G