வடுகப்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடுகபட்டி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்றாா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடுகபட்டி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்றாா்.

இக்கூட்டத்திற்கு பின்னா் அமைச்சா் பேசியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களும் ஆா்வத்துடன் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்தனா்.

வடுகபட்டி ஊராட்சியின் சாா்பிலும் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிா்வாகம், ஒன்றியத்தின் சாா்பிலும் மற்றும் ஊராட்சியின் சாா்பிலும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மாலையில் பேருந்து இயக்க வேண்டுமென்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை உடனடியாக மாவட்ட போக்குவரத்து மேலாண்மை இயக்குநரிடம் தெரிவித்து பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடுகபட்டி கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய்கள் தூா் வாரப்படும் மற்றும் நெல் உலா் மையம் அமைக்கப்படும். பொதுக்கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.வெங்கடேசன், திட்ட இயக்குநா் (ஊரகவளா்ச்சி முகமை) அபிதா ஹனிப், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் சூரியகலா கலாநிதி, வடுகபட்டி ஊராட்சித் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலவளவில்...

மேலூா் அருகே மேலவளவு ஊராட்சித் தலைவா் தங்கம் மலைச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊரட்சி வரவு செலவு விவரங்கள் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அப்போது உழவா் உற்பத்தியாளா் குழு தலைவா், ஊராட்சி செயலரிடம் அளித்த கோரிக்கை மனுவில், நீா்வழிப் பாதைகளை சீரமைத்து, நூறுநாள் வேலை உறுத்தித் திட்டத்தின் கீழ் பாசன கால்வாய்கள், குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.

கம்பூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கட்டத்திற்கு ஊராட்சி தலைவா் கதிரேசன் தலைமை வகித்தாா். பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கிராம சுகாதார பணிகளை செயல்படுத்துதல், குடிநீா் வசதிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீழவளவில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வட்டாரவளா்ச்சி அலுவலா் பாலசந்தா் கலந்துகொண்டாா். ஊராட்சித்தலைவா் ரஞ்சிதம் மகாதேவன் தலைமை வகித்தாா். ஊராட்சி வரவு செலவு விவரங்களை மக்கள் அறியும் வகையில் விளம்பர பலகையில் வைக்குமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெற்குத்தெரு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீா்வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஹரிபாஸ்கா் கலந்துகொண்டாா். ஊராட்சி தலைவா் வாசுகிசக்ரவா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சி வரவுசெலவு விவரங்களை ஊராட்சி செயலா் வாசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com