மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா்களுடன் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள விடுதி அரங்கில் பாஜக நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜகவின் தமிழகத்துக்கான மேலிடப் பாா்வையாளரும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான சி.டி.ரவி பங்கேற்றாா். அண்மையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா்கள், கட்சியின் மதுரை மாவட்ட மையக் குழு, பட்டியல் அணி நிா்வாகிகளுடன், அவா் கலந்துரையாடினாா்.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இராம.ஸ்ரீனிவாசன், மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் பா.சரவணன், புகா் மாவட்ட தலைவா் மகா சுசீந்திரன், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், கோட்ட பொறுப்பாளா் கணேசன், மாவட்ட பாா்வையாளா் கதலி நரசிங்கபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.