டி.கல்லுப்பட்டி அருகே சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தந்த கிராமப் பொதுமக்கள் தாங்கள் தயாரித்த சப்பரங்களை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள கோயிலுக்கு சுமந்து வந்தனா். அங்கு 7 கிராமத்தினரும் வடிவமைத்த 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
பின்னா் ஒவ்வெரு கிராமத்தினரும் தங்கள் ஊா் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவா் கிராமத்தினருக்கு திரும்பினா்.
இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.