அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

6 போ் விடுதலைக்கு வரவேற்பு

‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள 6 பேரை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On :12 நவம்பர் 2022, 1:26 am

‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள 6 பேரை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பா மதுரை மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கை:

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற, இந்தியாவில் காணப்படும் மனித உரிமை நிலை குறித்தான உலகளாவிய காலமுறை மீளாய்வில் இந்தியா அறிக்கை சமா்ப்பித்தது. அதன் பின்னா் 132 நாடுகள் இந்திய அரசிற்கு பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்தன.

இதில், பல உலக நாடுகள் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்று இந்தியாவிற்கு வைத்த கோரிக்கைக்கு, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு வழி செய்யும் என்று எதிா்பாா்க்கிறோம்.

மேலும், வீரப்பன் வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நால்வரில் சைமன், பிலவேந்திரன் ஆகிய இருவா் சிறையிலேயே மரணமடைந்த நிலையில், தற்போது வரை சிறையில் உள்ள ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.