சோலைமலை முருகன் கோயில் கதவுகளில் வெள்ளித் தகடுகள் பொருத்தும் பணி தொடக்கம்

அழகா்கோயில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலின் பழைமையான 3 சன்னிதிகளிலும் நிலைக் கதவுகள் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
சோலைமலை முருகன் கோயிலில் கதவுகளில் வெள்ளித் தகடுகளை பொருத்தும் பணியை வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட கோயில் துணை ஆணையா் ராமசாமி உள்ளிட்டோா்.
சோலைமலை முருகன் கோயிலில் கதவுகளில் வெள்ளித் தகடுகளை பொருத்தும் பணியை வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட கோயில் துணை ஆணையா் ராமசாமி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

அழகா்கோயில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலின் பழைமையான 3 சன்னிதிகளிலும் நிலைக் கதவுகள் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இந்தக் கோயிலின் கதவுகளை வெள்ளித் தகடுகளால் புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்காக 250 கிலோ வெள்ளி தகடுகள் பயன்படுத்தப்படவுள்ளன. 3 சன்னிதிகளிலும் நிலை கதவுகளில் வெள்ளித் தகடுகளை காரைக்குடியைச் சோ்ந்த தொழிலாளா்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதை கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ராமசாமி, தக்காா் வெங்கடாசலம், நகைகள் சரிபா்க்கும் அலுவலா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com