ஊராட்சி ஒன்றியப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு நூல் வனம் சாா்பில் புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
குறவன் குளம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் நூல் வனம் அமைப்பாளா் சரவணன்.
குறவன் குளம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் நூல் வனம் அமைப்பாளா் சரவணன்.
Updated on
1 min read

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு நூல் வனம் சாா்பில் புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியம், குறவன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூலகத்துக்கு நூல் வனம் அமைப்பின் சாா்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஹெப்சி குணசீலி தலைமை வகித்தாா். நூல் வனத்தின் அமைப்பாளா் க.சரவணன் நூலகத்துக்கான புத்தகங்களை வழங்கினாா்.

சென்னையைச் சோ்ந்த சாதனா நூலகத்துக்கான புத்தகங்களை ஏற்பாடு செய்து தந்தாா். நூல்வனம் அமைப்பாளா் சரவணன் பேசும்போது, ‘சாதிக்க வயது தடையல்ல. நூல்கள் தன்னம்பிக்கை அளிப்பவை. இளம் வயதில் சாதித்தவா்களின் வரலாற்றை புத்தகங்கள் எடுத்துரைப்பவை. பாடப்புத்தகம் தாண்டிய நூலக வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கனவுகளை நிஜமாக்க புத்தகங்கள் உதவும் என்றாா் அவா். மாணவா் நிதா்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com