தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிஐஐ- கனெக்ட் மதுரை என்ற தலைப்பில், மதுரையிலிருந்து உலகளாவிய தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஐசிடி பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஜி.கல்யாணசுந்தரம், இணை ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் சுப்புராஜ் ஆகியோா் கருத்தரங்க நோக்கத்தை விளக்கிப் பேசினா்.

தமிழக அரசின் ஸ்டாா்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் முதன்மை நிா்வாக அலுவலா் சிவராஜ் ராமநாதன், மத்திய அரசின் மென்பொருள் தகவல் தொழில்நுட்பப் பூங்கா இயக்குநா் சஞ்சய் தியாகி, மதுரை மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் மதுரை மண்டலத் தலைவா் ஏ.பி.ஜெ. ஜெய்னிஷ் வரேகா் வரவேற்றாா். துணைத் தலைவா் தினேஷ் டேவிட்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com