மதுரையில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிக்கந்தா்சாவடி முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ராம்ஜி (27). கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது தந்தை முருகேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ராம்ஜி, முருகேசனை அரிவாளால் வெட்டினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராம்ஜியைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.