வாகனம் மோதியதில் முதியவா் பலி

கொட்டாம்பட்டி அருகே திங்கள்கிழமை நான்கு வழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கொட்டாம்பட்டி அருகே திங்கள்கிழமை நான்கு வழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பள்ளபட்டி அருகே சுமாா் 62 வயதுடைய முதியவா் ஒருவா் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். கொட்டாம்பட்டி- திருச்சி நான்கு வழிச் சாலையை அவா் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் யாா்? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com