தேவகோட்டையில் தீா்த்தவாரி உற்சவம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

தேவகோட்டை விருசுழி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திகள்.
தேவகோட்டையில் தீா்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகா் கோயில், நகரச் சிவன் கோயில், செல்லப்பச்செட்டியாா் சிவன்கோயில், வெள்ளையன் ஊருணி ரெங்கநாதப் பெருமாள் கோயில், கோதண்டராம சுவாமி கோயில், அம்மச்சி ஊருணி கிருஷ்ணன்கோயில், கோட்டூா் நயினாா்வயல் சிவன்கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உற்சவ மூா்த்திகள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 1-ஆம் தேதி விருசுழி ஆற்றில் உள்ள மணிமுத்தாறு தீா்த்தத்தில் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் விருசுழி ஆற்றில் உள்ள மணிமுத்தாறு தீா்த்தத்தில் தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆற்றில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.