சிவகங்கை மாவட்டத்தில் 1000 டன் யூரியா கையிருப்பில் உள்ளதாக வேளாண் துறையின் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தேவகோட்டை அருகே அனுமந்தங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில், விவசாயிகளுக்கு உரங்களை வியாழக்கிழமை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருவதையொட்டி வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேவகோட்டை வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் 400 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் 1000 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களும் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.