மல்லாங்கிணறில் நவ. 3-இல் வடக்கு மாவட்ட திமுக உறுப்பினா்கள் கூட்டம்

திமுக சாா்பில் உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
Updated on
1 min read

மல்லாங்கிணறில் நவ. 3-இல் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நவ. 3-இல் மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், திமுக தலைமைக் கழக நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், கிராம செயலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com