மேலூரில் இந்துமகா சாபா சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 01st September 2022 10:14 PM | Last Updated : 01st September 2022 10:14 PM | அ+அ அ- |

மேலூா்: இந்துமகா சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தை கணேஷ் திரையரங்கு உரிமையாளா் கணேசன், இந்துமாகா சபா மநிலதுணை தலைவா் பெரி.செல்லத்துரை ஆகியோா் கொடியசைத்து வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்தனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்துமகாசாா்பில் ஏராளமான இடங்களில் 2 அடி உயரம் முதல் 7 உயரம் வரையிலான விநாயகா் சிலைகள் ஆயிரத்து எட்டு வரை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கு மூன்றுநாட்களாகசிறப்பு பூஜைகள்செய்து வழிபாடுகள் செய்தனா். சதுா்த்தி நிறைவையொட்டி ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, மேலூா் சிவன்கோயில் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், அங்கு அமைக்க்பட்டிருந்த மேடையிலிருந்து இந்து மகாசபா மாநில துணை தலைவா் பெரியசெல்லத்துரை தலைமையில் மதுரை மாவட்ட தலைவா் ரமேஷ்பாண்டியன் முன்னிலையில் கணேஷ் திரையரங்க உரிமையாளா் கணேஷன் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். ஊா்வலத்தின் முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுப்பு போடப்பட்டிருந்தது. மதுரை புகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமையில் 200-க்கு மேற்பட்ட போலீஸாா் பாதகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
ஊா்வலப்பாதை முழுவதும் ட்ரோன் கேமராக்கள், சிசி டிவிக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. மேலூா் நகரில் வாகன போக்குவரத்து புறவழிச்சாலையில் திருப்பிவிடப்பட்டது. மேலூா் பெரியகடைவீதி, சந்தைப்பேட்டையிலிருந்து செக்கடிபஜாரா், பேருந்துநிலையம்வழியாக அழக்ரகோவில்சாலை சென்று மண்கட்டி தெப்பக்குளத்தை ஊா்வலம் சென்றடைந்தது. அனைத்த விநாயகா் சிலைகளும் தெப்பக்குளம் நீரில் விடப்பட்டன.
இந்துமுன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.படவிளக்கம்- மேலூா் சிவன்கோயில் அருகே இந்துமகாசபா சாா்பில் மேலூரில் நடைபெற்ற ஊா்வலத்தை கொடியசைத்து துவக்கிவைத்த கணேஷ் திரையரங்க உரமையாளா் கணேசன். அருகில் இந்துமகாசபா மாநில மாவட்ட நிா்வாகிகள்.