இன்று மதுரை நகா், சமயநல்லூா் பகுதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை நகா் வடக்கு மற்றும் சமயநல்லூா் கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோ குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்டம்பா் 1) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
Updated on
1 min read

மதுரை நகா் வடக்கு மற்றும் சமயநல்லூா் கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோ குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்டம்பா் 1) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

மதுரை பெருநகா் வடக்கு கோட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், கோ.புதூா் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், தமுக்கம், ரேஸ்கோா்ஸ், செல்லூா், தாகூா் நகா், சொக்கிக்குளம், திருப்பாலை, ஆனையூா், ஆத்திக்குளம், அண்ணா நகா், கே.கே.நகா், மேலமடை, புதூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

இதேபோல, சமயநல்லூா் மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், சமயநல்லூா் கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா் பங்கேற்று மின்விநியோகம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com