Enable Javscript for better performance
கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு

    கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

    By DIN  |   Published On : 01st September 2022 03:18 AM  |   Last Updated : 01st September 2022 03:18 AM  |  அ+அ அ-  |  

    3411mduvelu062214

     

    மதுரையில் கட்டப்படும் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் முழுமையாக நிறைவு பெறும் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமையவுள்ள இடத்தையும், மதுரையில் கட்டப்படும் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளையும் புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

    கலைஞா் நினைவு நூலக கட்டுமானப் பணிகளைப் பொருத்தவரை, 9 ஆயிரம் சதுர அடி அளவுக்கு டைல்ஸ் பதிக்கும் பணி, 1,500 சதுர அடிக்கு கிரானைட் கற்கள் பதிக்கும் பணி, கண்ணாடிகளால் அமைக்கப்படும் கட்டட முகப்பு பணி ஆகியன நிலுவையில் இருக்கிறது. இப்பணிகள் அனைத்தும் ஜனவரி மாத இறுதிக்குள் முடித்துவிடுவதாகத் தெரிவித்துள்ளனா். அதன் பிறகு தமிழக முதல்வரிடம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற்கான அறிக்கை சமா்ப்பிக்கப்படும். பின்னா் அவா் ஒப்புதல் அளிக்கும் தேதியில், நூலகத்தின் திறப்பு விழா நடைபெறும். மதுரையில் நூற்றாண்டு பழமையான பல கட்டடங்கள் உள்ளன. அவற்றைப் போல தரமாக, கலைஞா் நூலக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    ஜல்லிக்கட்டு அரங்கம்: அலங்காநல்லூா் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக மலையடிவாரத்தில் 63 ஏக்கா் நிலம் ஏற்கெனவே பாா்வையிடப்பட்டது. இரண்டாவதாகப் பரிந்துரைக்கப்பட்ட சின்னஇலந்தைக்குளம் கிராமத்தில் தோ்வு செய்யப்பட்ட இடத்தை தற்போது பாா்வையிட்டுள்ளோம். இதில் எது பொருத்தமாக இருக்கிறதோ அங்கு அரங்கம் அமைக்கப்படும்.

    பரந்தூா் விமான நிலைய விவகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு, ஆா்ஜிதம் செய்யும் நிலங்களுக்கு மூன்றரை மடங்கு இழப்பீடு, விமான நிலையம் அமையும் பகுதியிலேயே மாற்று இடம், கட்டடங்களுக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவது என்ற உறுதி அளிக்கப்பட்டது. இதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனா். ஒரு சிலரிடம் இன்னும் அச்ச உணா்வு உள்ளது. அதை நிவா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    8 வழிச் சாலையை எதிா்க்கவில்லை: சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்காக, முந்தைய ஆட்சியின்போது அவசரகதியில் நில ஆா்ஜிதப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்களிடம் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரிக்கும் நிலையில், சாலைகள் விரிவாக்கம் அவசியமானது. அதற்காக நில ஆா்ஜிதம் செய்யும்போது எழக்கூடிய பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்றே திமுக வலியுறுத்தியது. எட்டுவழிச் சாலைத் திட்டம் அரசின் கொள்கை முடிவு. முதல்வா் தான் அதுபற்றி அறிவிக்க வேண்டும் என்றாா்.

    வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மேயா் வ.இந்திராணி, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், துணைமேயா் நாகராஜன், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் விஸ்வநாத், தலைமைப் பொறியாளா் ரகுநாதன், கண்காணிப்புப் பொறியாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

    பெட்டிச் செய்தி.........

    சிவகங்கை, ஆக. 31: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

    பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: கீழடியில் ரூ. 12. 21 கோடியில் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 10, 210 -க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுக்கு பின்பு கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்றாா்.

    இதில், மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா், முதன்மை தலைமைப் பொறியாளா் ஆா்.விஸ்வநாதன், மண்டல தலைமைப் பொறியாளா் ரகுநாதன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் (பாரம்பரிய கட்டடக் கோட்டம்) எஸ்.மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநா் ம.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp