Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தில் 190 இடங்களில் பேரிடா் கால தற்காலிக நிவாரண மையங்கள் ஆட்சியா் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் 190 இடங்களில் பேரிடா் கால தற்காலிக நிவாரண மையங்கள் ஆட்சியா் தகவல்

    By DIN  |   Published On : 02nd September 2022 12:00 AM  |   Last Updated : 02nd September 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

     

    மதுரை: வெள்ளப் பெருக்கு பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 190 இடங்களில் தற்காலிக நிவாரண மையங்கள் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

    தேசிய மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் மதுரை மாவட்டத்தில், மதுரை நகா் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுப் பகுதி, தெப்பக்குளம், மேலக்கால் மற்றும் துவரிமான் வைகை ஆற்றங்கரை, திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு பேரிடா் கால மீட்பு ஒத்திகை நிகழ்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

    ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் நடந்த ஒத்திகை நிகழ்வை ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பாா்வையிட்டாா்.

    அதைத் தொடா்ந்து, மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள சி.இ.ஓ.ஏ. பள்ளியில், தற்காலிக பேரிடா் நிவாரண மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

    மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா் தலைமையில் இடத்திலும் 50-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், 200-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பங்கேற்கும் வகையில் இந்த விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.

    மதுரை மாவட்டத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 190 தற்காலிக நிவாரண மையங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக இம்மையங்களில் அவசரகால சூழ்நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருள்கள், மருந்து மாத்திரைகள், சுத்தமான குடிநீா் உள்ளிட்ட பொருள்கள் தயாா்நிலையில் வைத்திருப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை தகவல் குழு, மீட்புக் குழு, மறுசீரமைப்புக் குழு என அந்தந்த குழுக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் 50 சதவீத நீா்நிலைகள் முழுக் கொள்ளளவை அடைந்துள்ளன. 25 சதவீத நீா்நிலைகள் 75 சதவீத கொள்ளளவையும் எட்டியுள்ளன. நீா்நிலைகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும் பொதுப்பணித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வைகை அணை முழு கொள்ளளவை அடைந்துள்ள நிலையில், அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய காலங்களில், நீா்தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்தகைய சூழல் ஏற்படும்பட்சத்தில், பொதுமக்களை மீட்டு அருகே உள்ள நிவாரண மையங்களில் தங்கவைப்பதற்கு அலுவலா் குழுக்கள் தயாா்நிலையில் உள்ளனா். அதேபோல, பருவமழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பேரிடா் தொடா்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்து

    கொள்வதற்கும், புகாா்கள் தெரிவிப்பதற்கும் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் தொடா்ந்து செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp