சா்வதேச மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மதுரையைச் சோ்ந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சா்வதேச அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே வாராணசி, ராஞ்சி, லக்னெள ஆகிய நகரங்களில் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 20-20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் இந்திய அணிக்கு மதுரையைச் சோ்ந்த சச்சின் சிவா, ராஜேஷ்குமாா், சிவகங்கையைச் சோ்ந்த லிங்காராஜ், சேலத்தைச் சோ்ந்த மணிவண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.