லாரி மோதி முதியவா் பலி

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள திருமால்புரத்தை சோ்ந்தவா் மணிக்காளை (70). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையில் நடந்து சென்றாா்.

இந்த நிலையில், மணிக்காளை சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த லாரி மணிக்காளை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஊமச்சிகுளம் போலீஸாா், வாடிப்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com