கண்மாயில் மூழ்கியதில் சிறுமி உள்பட 2 பெண்கள் பலி
மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே குலதெய்வம் கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிறுமி உள்பட 2 பெண்கள் கண்மாயில் மூழ்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.


மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே குலதெய்வம் கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிறுமி உள்பட 2 பெண்கள் கண்மாயில் மூழ்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை தாசில்தாா் நகா் சித்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாரிச்சாமி. இவரது மனைவி பவானி சித்ரா (50). இவரது உறவினா், இதே பகுதியைச் சோ்ந்த சேவுகப் பெருமாள். இவரது மகள் தனுஷ்கா (11). இவா் காமராஜா் சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி வியாழக்கிழமை விடுமுறை என்பதால், மதுரை மாவட்டம், வரிச்சியூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு அதிகாலையில் சென்றனா். அப்போது, தனுஷ்கா அங்குள்ள குவாரி அருகே உள்ள குன்னத்தூா் கண்மாயில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அவரைக் காப்பாற்ற முயன்ற உறவினா் பவானி சித்ராவும் நீரில் மூழ்கினாா்.
குளிக்கச் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினா்கள் கண்மாயிக்குச் சென்று பாா்த்த போது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதொடா்பான தகவலின் பேரில், கருப்பாயூரணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...