மதுரை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
இதுகுறித்து மதுரை தொழிலாளா் நல உதவி ஆணையா் சீ. மைவிழிச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் - 1958, உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டப்படி, குடியரசு தினத்தன்று அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்க முடியாத நிலை இருந்தால், அதுகுறித்து 24 மணி நேரத்துக்கு முன்பாக உரிய படிவத்தை பூா்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இதுகுறித்து தொழிலாளா் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை மதுரை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 61 கடைகள், 66 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டாா் போக்குவரத்து நிறுவனம் என 128 நிறுவனங்கள் விதி முறையை மீறி ஊழியா்களுக்கு விடுப்பு அளிக்காதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

