உசிலம்பட்டியில் தனியாா் வங்கி உதவி மேலாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சத்தியா நகரைச் சோ்ந்த சக்கரை மகன் விக்னேஷ் (28). இவா் தனியாா் வங்கியின் உசிலம்பட்டி கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வங்கி அருகே காா் நிறுத்துமிடத்தில் விக்னேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். இதையடுத்து, அவா் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு விக்னேஷ் உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.