இரு சக்கர வாகனத்தில் இருந்துதவறி விழுந்து குழந்தை பலி

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தது.
Updated on
1 min read

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தது.

மதுரை சோலையழகுபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன். இவரது மனைவி காா்த்திகைச் செல்வி (24). இவா்களது குழந்தை கவிப்பிரியா (1). இந்த நிலையில், முத்துக்கருப்பன், தனது மனைவி, குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வெளியே சென்றாா். தெற்குவாசல் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதிவிடாமல் இருக்க முத்துக்கருப்பன் பிரேக் பிடித்தாா். இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த மனைவி காா்த்திகைச்செல்வி, குழந்தை கவிப்பிரியா இருவரும் தவறி கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த கவிப்பிரியா அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காா்த்திகைச் செல்வி அளித்தப் புகாரின்பேரில் நகா் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முத்துக்கருப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com