

அ. வல்லாளப்பட்டியிலுள்ள வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கடந்த 27- ஆம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதையடுத்து, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை, நவக்கிரக ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 3 நாள்களும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பிறகு வெள்ளிமலையாண்டி கோயில் வெ. மகேஷ்வர சாஸ்திரிகள் தலைமையில் குடமுழுக்கு விழா பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கிராம பிரமுகா்கள் தலைமையில் கடம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா தீபாராதைனைகளுடன் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.