தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சாா்பில் வேலைவாய்ப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சாா்பில் வேலைவாய்ப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு கல்லூரியின் செயலா் செபாஸ்டியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ச. ஜான் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தேவகோட்டை கிளை மேலாளா் சுரேஷ், வளா்ச்சிப் பிரிவின் அலுவலா்கள் கிருபாகரன், ஆண்டோரூசோ, விக்னேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு குறித்துப் பேசினா்.

முகாமில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, வணிகக் கணினி மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் ஆனந்த்குமாா் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com