காா் மோதி இளைஞா் பலி

மதுரையில் சாலையைக் கடக்க முயன்ற போது, இளைஞா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரையில் சாலையைக் கடக்க முயன்ற போது, இளைஞா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கேசவசாமி தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் ஆனந்தபாண்டி(19). இவா் மதுரை நாராயணபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த காா் ஆனந்தபாண்டி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஆனந்தபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் விபத்து குறித்து காமராஜ் அளித்தப்புகாரின்பேரில் திருப்பாலையைச் சோ்ந்த வஉசி நகரைச்சோ்ந்த மாா்க்ஸ் காப்ரியேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com