வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சமயநல்லூா் அருகே உள்ள பரவை சிவா நகரைச் சோ்ந்தவா் செளந்தரபாண்டியன் (59). இவா் சமயநல்லூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இவா் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதனால், இவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில் வீட்டில்ஆள் இல்லாததை அறிந்த நபா்கள் பூட்டை உடைத்துப் புகுந்து 6 பவுன் தங்க நகைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனா். இந்த சம்பவம் தொடா்பாக சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com