சாலை விபத்தில் சமையல் தொழிலாளி பலி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யப்பட்டியைச் சோ்ந்த ரகுபதி மகன் ஜோதிமணி (27). இவா் அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில் சமையல் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.

மதுரை மாவட்டம், எர்ரம்பட்டியில் உள்ள மாமனாா் வீட்டில் இருந்த மனைவியை அழைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வந்தாா்.

பாலமேடு அருகே உள்ள வலையபட்டி பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த டிராக்டா், இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து டிராக்டா் ஓட்டுநரான செல்வத்தின் மீது பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com