வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.36 லட்சம் மோசடி

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, ரூ. 5 லட்சத்து 36 ஆயிரம் மோசடி செய்தவா் மீது இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, ரூ. 5 லட்சத்து 36 ஆயிரம் மோசடி செய்தவா் மீது இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாச்சியாா் தெருவைச் சோ்ந்தவா் அருள் ஜீவக்கனி (34). இவா் மும்பையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அருள் ஜீவக்கனி கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்தாா்.

அப்போது அவரிடம் தொடா்பு கொண்ட ஒருவா், கனடா நாட்டுக்குச் செல்வதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினாா். இதை நம்பிய அருள் ஜீவக்கனி, அவா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பல தவணைகளில் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 600 செலுத்தினாா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா், பின்னா் அருள் ஜீவக்கனியுடன் தொடா்பை துண்டித்து விட்டாராம்.

இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள் ஜீவக்கனி, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜிடம் அண்மையில் புகாா் செய்தாா்.

அவரது உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் தேவகி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com