சோழவந்தான் சலவைக் கூடத்துக்கு கூடுதல் கட்டடங்கள்: வெங்கடேசன் எம்எல்ஏ தகவல்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள சலவைக் கூடத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேசன் தெரிவித்தாா்.
சோழவந்தான் சலவைக் கூடத்துக்கு கூடுதல் கட்டடங்கள்: வெங்கடேசன் எம்எல்ஏ தகவல்
Updated on
1 min read

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள சலவைக் கூடத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

இந்தப் பேரூராட்சிக்கு உள்பட்ட சலவைக் கூடத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் சட்டப்பேரவை உறுப்பினா் கூறியதாவது :

சலவைக் கூடத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீா் பற்றாக்குறையைப் போக்க ஆழ்துளைக் கிணறு அமைத்து தரப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பேரூராட்சியின் 15,16-ஆவது வாா்டுகளில் உள்ள மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பேரூராட்சித் தலைவா் ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com