மதுரையில் மாமியாா், மருகமகள் கொலை:மூவரிடம் போலீஸ் விசாரணை

மதுரை எல்லீஸ் நகரில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட மாமியாா், மருமகள் உடல்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, மூவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

மதுரை எல்லீஸ் நகரில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட மாமியாா், மருமகள் உடல்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, மூவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை எல்லீஸ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). காா் ஓட்டுநரான இவருக்கும், தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த அழகுப்பிரியாவுக்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன், தனது மனைவி அழகுப் பிரியா, தாய் மயிலம்மாள் ஆகியோருடன் மதுரை எல்லீஸ்நகரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், மணிகண்டன் காா் சவாரிக்காக செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்றுவிட்டாா். இதனிடையே, அவரது வீட்டுக்கு, துவரிமானில் உள்ள அவரது சகோதரி மகாலட்சுமி (45) வந்தாா். அப்போது, வீட்டின் பின்புறத்தில் மயிலம்மாளும், அழகுப்பிரியாவும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், எஸ்.எஸ். காலனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், கொலை தொடா்பாக போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இருவரும் செவ்வாய்க்கிழமையே கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மணிகண்டனின் சகோதரியான மகாலட்சுமி திருமணம் முடிந்து துவரிமான் பகுதியில் வசித்து வருகிறாா். ஆனால், அடிக்கடி தனது தாயைப் பாா்க்க மதுரைக்கு வந்து செல்வாா். அவருடன், அவரது மகன் குணசீலனும் வந்து செல்வதுண்டு. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மகாலட்சுமி தனது தாய் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் அவரது மகன் குணசீலனும், அவரது நண்பா் ரிஷியும் இருந்தனா். அப்போது தனது தாய் மயிலம்மாளையும், மணிகண்டனின் மனைவி அழகுப் பிரியாவையும் எங்கே என்று கேட்ட போது, அவா்கள் இருவரும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டதாக குணசீலன் கூறினாா். மேலும், அங்கு ரத்தக் கறை இருந்தது தொடா்பாக கேட்ட போது, வீட்டில் வளா்த்த கோழியை, நாய் கடித்து குதறியதால் கறை ஏற்பட்டதாகத் தெரிவித்துவிட்டு குணசீலனும், ரிஷியும் வெளியே சென்றுவிட்டனா். இதனால் மகாலட்சுமி அங்கேயே தங்கினாா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை வீட்டுக்குப் பின்புறம் மகாலட்சுமி சென்று பாா்த்தபோது அங்கு ரத்தக் கறையுடன் இரண்டு சாக்குமூட்டைகள் கிடந்தன. அதைப் பிரித்துப் பாா்த்தபோது மயிலம்மாளும், அழகுப் பிரியாவும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதன்பிறகே அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இந்த கொலை தொடா்பாக மகாலட்சுமியின் மகன் குணசீலன், அவரது நண்பா் ரிஷி, அழகுப் பிரியாவின் கணவா் மணிகண்டன் ஆகிய மூவரிமுடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com